முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ.....
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
பிழை எல்லாமே கலைவேன்
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ...
நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்