விடியா இரவைக் கேட்கவா ..?
மறையா சூரியன் கேட்கவா ..?
புல் நுனி பனி துளி கேட்கவா.. ?
வானின் மேகம் கேட்கவா ..?
விழி மூடா கனவை கேட்கவா ..?
கனவில் உன்னை கேட்கவா ..?
அன்பே உனதன்பை கேட்கவா. ?
அன்பாய் நான் மாறிட கேட்கவா.?
உயிரே உயிர் பிழைத்திட கேட்கவா..?
நீ இன்றி மரித்திட கேட்கவா ..?
கேள்விகள் மட்டும் என்னிடம் குடுத்து விட்டு ...
உயிர் வருடிச் சென்றாயே... !
இளைப்பாற வருவாயா ....?