Recent posts

#51
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.
#52
குட்டித் தவளைகள் இரண்டு குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அங்கு ஆழம் அதிகமான ஒரு பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

தாவிக் குதித்துக் கொண்டிருந்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.

தான் விழுந்தது பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை.

அந்தத் தவளை மிகவும் அவநம்பிக்கை கொண்டது. அதனால் அது தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாமலிருந்தது. பாலிற்குள் மூழ்கி அதனடிக்குச் சென்று உயிரை விட்டது.

இன்னொரு குட்டித் தவளையோ தான் அதிலிருந்து தப்பித்து விடுவோம் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தது.

அது பால் என்று தெரிந்தும் தன் கால்களைப் போட்டு, இங்கும் அங்கும் அடித்து உதைத்தது நீச்சல் போட்டது. பாலுக்குள் உந்தி..உந்தி நீந்திக் கலக்கியபடி இருந்தது.

பால் கலங்க ஆரம்பித்தது. அந்தப் பாலில் மேலாக ஆடை படரத் தொடங்கியது. அந்தத் தவளை மேலும்... மேலும்... உதைக்க... அந்தப் பாலின் மேலிருந்த ஆடை சிறிதுசிறிதாக வெண்ணைய்ப் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறியது, பின் அதிலிருந்து வெளியே தாவிப் பாய்ந்தது.

நம்பிக்கையுடையவன் செய்யும் செயல்கள் அவனுக்கு எப்போதும் வெற்றியைத் தேடித் தருகிறது.
#53
ஒரு ஊரில் ஒரு சிற்பி இருந்தான். ஒரு நாள் அவனிடம் அந்த ஊர் மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமி சிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்று கேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டு கற்களை கொண்டு வந்தான். ஒரு கல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படி கல்லாகவும் செய்து முடித்தான். கோயில் கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவது கேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான் தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தை கேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரே மலையில் தான் பிறந்தோம்..ஒரே சிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகி செய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்துவிட்டான். உன்னை அனைவரும் கை எடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறி மிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என்று புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்த சாமிக்கல் ' உன் நிலைக்கு நீயே தான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன் மீது அடித்தார். நீ வலியை தாங்க முடியாமல் கதறினாய். உன் மீது எங்கு உளி பட்டாலும் உன்னால் அந்த வலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியே வைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும் போது அந்த வலியை நான் பொருத்துக் கொண்டேன்..தலை, கை, கால் என எல்லா பகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக்கொண்டேன். ஆகையால் நான் ஒரு சிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என்று கூறிய உடன் தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே...நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக்கொள்கிறார்களோ, அவர்களே எதிர்காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்..
#54
ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று கேட்டார்கள்.

நான் ''தேவலோகத்திலிருந்து வருகிறேன்'' என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

''உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?'' என்று கேட்க ''கடவுள்தான் அனுப்பி வைத்தார்.'' என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும் அவன் சிரித்தான்.

''என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!''

''எப்படி எல்லாம் நடக்கும் என்று?'' என் ஊரார்கள் கேட்க

''உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?''

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

''சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

''நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.'' என்றான்

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

''நீ ஏன் சிரிக்கிறாய்?'' ன்னு கேட்டான்

''நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!''

''எது பொய் என்கிறாய்?''

''கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!''

''அது எப்படி உனக்குத் தெரியும்?''

''நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!''

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ''நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.''

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ''நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!'' என்றான்.
அவர் 'பளார்' என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ''அவனை ஏன் அறைந்தீர்கள்?''

''அவன் ஒரு பைத்தியக்காரன்!''

''அப்படியா?''

''ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!''
#55
ஓர் ஊரில் செல்வா என்ற உழவன் இருந்தான். முட்டாளான அவனுக்கு வாய்த்திருந்த மனைவி அறிவுள்ளவளாக விளங்கினாள்.
ஒருநாள் செல்வாவும், அவன் நண்பனும் வயலில் ஏற்றம் இறைத்துக் கொண்டு இருந்தனர். மதிய உணவு நேரம் வந்தது. இருவரும் வேலையை நிறுத்திவிட்டு, தங்கள் சாப்பாட்டுக் கூடையை எடுத்து உண்ணத் தொடங்கினர்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் நண்பனுக்கு புரையேறிவிட்டது. தன் தலையில் தானே தட்டிக் கொண்டு, இருமிக் கொண்டிருந்தான்.""ஏன் இப்படி இருமுகிறாய்?'' என்று கேட்டான் செல்வா.

""என் மனைவி என்னை நினைக்கிறாள். அதுதான் எனக்குப் புரையேறிவிட்டது. வேறொன்றும் இல்லை,'' என்றான் அவன்.
சாப்பிட்டு முடிப்பதற்குள் மீண்டும், மீண்டும் அவனுக்கு நான்கைந்து முறை புரையேறி விட்டது.
இதைக் கண்ட செல்வா, "இவன் மனைவி எப்போதும் இவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் இவனுக்கு அடிக்கடி புரையேறுகிறது. என் மனைவி என்னை ஒருமுறை கூட நினைப்பதில்லை. அதனால்தான் எனக்குப் புரையேறவில்லை. வீட்டிற்கு போய் அவளை என்ன செய்கிறேன்' பார் என்று மனதிற்குள் கறுவினான்.மாலை நேரம் வந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வாவால், கோபத்தை அடக்க முடியவில்லை.முரடனான அவன் தன் மனைவியை, ஓங்கி ஓர் அடி அடித்தான்.
""எதற்காக என்னை அடிக்கிறீர்கள்?'' என்றாள்.

""அடியே உனக்கு நான் என்ன குறை வைத்தேன். உன்னை அன்பாகத்தானே பார்த்துக் கொண்டேன். நீயோ நான் வீட்டை விட்டுச் சென்றால், என்னை மறந்துவிடுகிறாய்,'' என்று கத்தினான்.""நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லையே?'' என்றாள்.மதியம் சாப்பிடும்போது நடந்த விஷயத்தை விவரித்தான்.முட்டாளான தன் கணவனுக்கு, புத்தி புகட்ட திட்டமிட்டாள்.
மறுநாள் வழக்கம் போல செல்வாவும், நண்பனும் மதியம் உண்பதற்காக அமர்ந்தனர். செல்வா சாப்பாட்டுக் கூடையை அவிழ்த்தான். அதனுள் மிளகு சாதம் இருந்தது.

அதனுள்ளிருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போட்டான். மிகக் காரமாக இருந்தபடியால் கண்ணிலும், மூக்கிலும் நீர் வரத் தொடங்கியது. சிறிது நேரத்தில் புரையேறி அடுக்கடுக்காக, தும்மத் தொடங்கினான்.
உடனே நண்பனைப் பார்த்து, " என் மனைவி என்னை நினைக்கிறாள். அதனால் தான் இப்படி...' என்று சொல்லிவிட்டு, அடுத்த ஒரு பிடி உண்டான்.

மீண்டும் அடுக்கடுக்காக பலமான தும்மல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தது.
"ஐயோ என்னை நினைக்கச் சொன்னதற்காக இப்படியா ஓயாமல் நினைப்பது. என்னால் தும்மலை அடக்க முடியவில்லையே. நேற்று என்னை நினைக்காத தற்காக அடி வாங்கினாய். இன்று அதிகம் நினைத்ததற்காக உதை வாங்கப் போகிறாய்' என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நண்பன், செல்வாவின் அறியாமையைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
மாலை வீடு திரும்பிய செல்வா தன் மனைவியைப் பார்த்து, ""நீ வழக்கம் போலவே இரு. இன்று நினைத்துக் கொண்டிருந்தது போலச் செய்யாதே. அந்தத் தொல்லையை என்னால் தாங்க முடியாது,'' என்றான்.
தன் சூழ்ச்சி வெற்றி பெற்றதை நினைத்து மனைவி மகிழ்ந்தாள்.
#56
சின்னக்குப்பம் என்ற ஊரில் சின்னசாமி என்னும் பெயருடைய ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு அவருடைய தந்தை ஏராளமான செல்வத்தை சேர்த்து வைத்திருந் தார். சின்னசாமி இளமையிலேயே வறுமையில் வாடுபவர்களிடம் பாசமும், பரிவும் கொண்டவர். பசியுடன் யாரையாவது பார்த்து விட்டால், உடனே அவர்கள் பசியைப் போக்க அவர்களுக்கு வயிறு நிறைய உணவளிப்பார்.

சின்னசாமி நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர். அவர் விரும்பி படித்த புத்தகங்கள் அனைத்தும் அவரை நல்வழிப் படுத்தியதோடு இந்த உலக வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர வைத்தது. அவர் தந்தை, அவருக்கு சேர்த்து வைத்த சொத்து முழுவதையும், உறவினர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தானமாக அளித்து விட்டு, ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசை வீடு கட்டிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வந்தார்.

சின்னசாமி கூறும் அறிவுரைகளைக் கேட்க, அவர் குடிசையைச் சுற்றி எப்போதும் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அவர் குடிசையை தேடி வந்தவாறு இருப்பர். சின்னசாமி தன் சொத்து முழுவதையும் தானம் செய்து விட்டதால், தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க, தனக்கு மிகவும் தெரிந்த ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிரிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் தேவைக்கு சொற்ப தொகையை எடுத்துக் கொண்டு, மீதியை ஏழை எளியோருக்கு உதவி செய்து வந்தார்.

ஒருநாள் சின்னசாமி வீட்டின் முன்னே பெரியோர், சிறியோர் மற்றும் பெண்களும் கூடி இருந்த கூட்டத்தில், மன்னனும் மாறுவேடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது சின்னசாமி கூட்டத்தைப் பார்த்து, ""இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்து பொருட்களும், உண்மையல்ல, எல்லாமே மாயை,'' என்று கூறினார்.

பிறகு அவர், ""இன்றைக்கு இருப்பவர்கள் நாளைக்கு இல்லை. எந்த பொருளும் யாருக்கும் எப்போதும் சொந்தம் இல்லை. ஒரு பெண் பிள்ளை திருமணம் செய்துக் கொண்டு கணவன் வீடு செல்லும் வரை அவள் பெற்றவர்களுக்கு சொந்தமாக இருக்கிறாள். திருமணம் முடிந்து கணவன் வீடு சென்ற உடன், அவள் கணவனுக்கு சொந்தமாகி விடுகிறாள். வாழ்க்கையே ஏற்றத் தாழ்வு நிறைந்தது தான். இன்றைக்கு பணக்காரனாக இருப்பவன், நாளைக்கு ஏழையாகிவிடுகிறான். இன்றைக்கு ஏழையாக இருப்பவன், நாளைக்கு பணக்காரனாகி விடுகிறான். உலகத்தில் யாருமே நிரந்தரமாக பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பதில்லை.
""மரம் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர் அதன் பலனை அனுபவிப்பதில்லை. மரம் நட்டவர், அது பலன் தரும் காலத்தில் உயிரோடிருப்பதில்லை. மரம் நட்டவரின் வாரிசுகள் தான் பலனை அனுபவிக்கின்றனர்.

""இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமாக இருக்கும் அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவருக்கு சொந்தமாகி விடும். உலகில் நாம் கண்டு அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. அது காலத்தின் சுழற்சியில் மாறிக்கொண்டே இருக்கும். ""அதனால் எப்போதும் எந்த பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது. நமக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். ஆகையால், நாம் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாமல், வாழ கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று அறிவுரைகள் கூறினார் சின்னசாமி.

மாறுவேடத்தில் இருந்த அரசன், சின்னசாமி கூறியவைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அவர் இதுவரை, சின்னசாமி கூறிய அறிவுரைகளைப் போல் வேறு யாரும் கூறக் கேட்டதில்லை. அரசனுக்கு சின்னசாமி கூறிய ஒரு தத்துவம் மட்டும் சரியாக புரியவில்லை. இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமான அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விடும் என்று சின்னசாமி கூறியதை அரசனால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
சில நாட்களுக்கு பிறகு சின்னசாமி தனியாக அரண்மனை இருக்கும் ராஜவீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். உப்பரிகையில் நின்றுக் கொண்டிருந்த அரசர் சின்னசாமியைப் பார்த்து விட்டு, அவரை சந்திக்க கீழே இறங்கி வந்தார்.

அரசர் சின்னசாமியைப் பார்த்து, ""ஐயா! தாங்கள் ஒருநாள், தங்கள் குடிசையின் முன்னால் கூடி யிருந்த மக்களுக்கு, அறிவுரைகள் சொல்லும் போது, இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமான அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவனுக்கு சொந்தம் என்று கூறிய தத்துவம் புரியவில்லை. அதைப் பற்றி தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்,'' என்று கேட்டார் அரசர்.

அரசர் கூறியதைக் கேட்ட சின்னசாமி புன்னகைத்தவாறே, அரசனைப் பார்த்து, ""நீங்கள் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் அரண்மனை நீங்கள் கட்டியதா?'' என்று கேட்டார்.""நான் கட்டவில்லை. என் தந்தை கட்டியது,'' என்று கூறினான்.
"""நீங்கள் இந்த அரண்மனையைக் கட்ட வில்லை. ஆனால், இன்றைக்கு இந்த அரண்மனைக்கு நீங்கள் சொந்தக்காரராக இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இந்த அரண்மனையின் சொந்தக்காரர் யார்?'' என்று சின்னசாமி கேட்டார்.
""அரண்மனையை கட்டிய என் தந்தை தான் சொந்தக்காரர்,'' என்று கூறினான்.
"
"ஒரு காலத்தில் உங்கள் தந்தைக்கு சொந்தமாக இருந்த அரண்மனை இன்று உங்களுக்கு சொந்தம், நாளைக்கு உங்கள் மகனுக்கும் சொந்தம். இதைத்தான், நான் அன்று என் குடிசை முன்னால் இருந்த கூட்டத்தில், இன்றைக்கு பல பணக்காரர்களுக்கு சொந்தமாக உள்ள அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவருக்கு சொந்தமாகி விடும் என்று கூறினேன்,'' என்றார் சின்னசாமி.சின்னசாமி கூறிய தத்துவத்தை புரிந்துக் கொண்ட அரசன், தன் காவலர்களை அழைத்து, சின்னசாமிக்கு அளிக்க நிறைய பொன்னும், மணியும் கொண்டு வரும்படி கட்டளை யிட்டான்.

சின்னசாமி உடனே, அரசனை வணங்கி, ""அரசே! இதுபோன்ற பொன்னும், மணியும் தேவையில்லை என்றுதான் என் தந்தை எனக்கு விட்டுச் சென்ற சொத்து முழுவதையும் தானம் செய்து விட்டு, உழைத்து சாப்பிடுவதோடு, மீதி இருக்கும் பணத்தை தர்மம் செய்து கொண்டிருக்கிறேன்,'' என்று கூறியவாறே நடந்து சென்றான். பொன்னும், மணியும் தேவையில்லை என்று உதறிவிட்டு செல்லும் சின்னசாமியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அரசர்.
#57
ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது தான் என்றாலும், சில விஷயங்களில், இதுவே, பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.

தான் பட்ட கஷ்டம், தன் மகனோ, மகளோ படக்கூடாது என்ற எண்ணம், பல பெற்றோரிடையே உண்டு. இப்போதெல்லாம், ப்ளஸ்டூக்கு வந்தவுடனேயே பிள்ளைகளும், எல்லாமே நமக்குத்தான் என்று, உணர்ந்து விடுகின்றனர்.
சிவராமன், தன் மகன் பிரபுவை உட்கார வைத்து, ""பிரபு, உனக்கு, லீவு விட்டாச்சுல்ல... வீட்ல, "டிவி' இருக்கு; ஹாய்யா உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பாரேன். எதுக்கு பிரெண்ட்ஸ் கூட, ஸ்டேடியத்துக்கு போகணும்கிற... சரி டிக்கெட் நூறு, இருநூறுன்னா பரவாயில்லை, மினிமம் ஆயிரம் ரூபாய்ங்குறான். இப்ப எல்லாமே டே, நைட் மேட்ச்சா போச்சு. மேட்ச் முடிஞ்சு, ராத்திரி எப்படி திரும்புவ? நண்பர்களோட வண்டியில வர்றது ஆபத்தில்லியா... உன்னை அனுப்பிட்டு, நாங்க கவலையோட உட்கார்ந்து இருக்கணுமா?''

பிரபு, அப்பாவை வெறுப்போடு பார்த்தான். எத்தனை பேருக்கு, சென்னையில் வாழ வாய்ப்பிருக்கு. அப்படி இருந்தும், ஒரு மேட்சை கூட நேரடியாக பாக்க முடியவில்லை என்றால்... அப்பா, அம்மா சொல்படி நன்றாகத்தானே படிக்கிறோம். பிறகு, ஏன் கொஞ்சம் செலவு செய்து, ஒரு மேட்ச்சிற்கு, அனுப்ப மறுக்கின்றனர். நண்பர்கள், ஸ்டேடியத்தில் அமர்ந்து, நேராக தோனியையும், ரெய்னாவையும் பார்த்தது பற்றி, பரவசமாக விவரிக்கும்போது, எவ்வளவு ஆவல் வருகிறது. அவங்க, அப்பா, அம்மா மட்டும், எப்படி அனுமதிக்கின்றனர்! எனக்காக, ஒரு ஆயிரம் ரூபாய் செலவழிக்க கூடாதா... கேட்டால், "இந்த வீடு, ஆஸ்தி எல்லாமே உனக்குத்தானே' என்று உருகுகின்றனர். அதேநேரம், ஒரு டீன்-ஏஜ் பையனின் ஆசையை, புரிந்து கொள்ள மறுக்கின்றனரே...
அவன் மனதில் ஓடியதை, சிவராமன் புரிந்து கொண்டார்...

""பிரபு, நீ என்ன நினைக்கிறன்னு புரியுது. உன் நண்பர்களை எல்லாம் மேட்ச் பார்க்க, அவங்க பெற்றோர் அனுப்புகையில், நம்மை ஏன் அப்பா அனுப்ப மறுக்கிறார்ன்னு நினைக்கிற அப்பா. அவங்களோட "கம்பேர்' பண்ணி பார்க்காதே. எவ்வளவோ பேர் நேர்ல பாக்காம, வீட்ல உட்கார்ந்து பாக்கறாங்க. அத நெனைச்சி பாரு. ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஸ்டேடியத்துக்கு போறது ரொம்ப அதிகம். நான் அனுமதிக்க மாட்டேன்,'' என, கறாராக சொல்லிவிட்டு, ஆபீசுக்கு கிளம்பினார் சிவராமன். "சே...' பிரபு, எதிரில் இருந்த சுவற்றை காலால் உதைத்தான். பிறகு மென்மையாக அழுதான். இயலாமையும், கோபமும் இணைந்து கொண்டதன் விளைவு.
அம்மா பார்வதிக்கு, அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால், கணவனிடம் சொல்ல முடியாது, "என்ன புள்ளைக்கு சப்போர்ட்டா...' என்று, உறுமுவார்.ஐந்து நிமிடம், அப்படியே உட்கார்ந்திருந்தான் பிரபு. "ஏண்டா... உங்க வீட்டுல அனுப்ப மாட்டேன்னுட்டாங்களா...' நண்பர்கள் ஏளனம் செய்தால், என்ன பதில் சொல்வது என்று நினைக்கும்போது, இன்னும் அழுகை வந்தது.
"
டேய் பிரபு, வந்து சாப்டுடா. நான் வேணா அப்பா கிட்ட சொல்லிப் பாக்கறேன்,'' என்று பார்வதி சொல்ல, பிரபு சட்டை செய்யவில்லை. அம்மா ஆறுதலுக்கு சொல்கிறாள் என்பது, பிரபுவுக்கு தெரியும். இந்த வீட்டில், அப்பா தான் எல்லாமும்.
வாசலில், "பைக்' சத்தம் கேட்டது. வருவது முரளி மாமா. அவசர அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டான் பிரபு.
பார்வதி வெளியில் வந்து, ""வாடா,'' என, தம்பியை வரவேற்றாள். மாமா, வீட்டிற்குள் நுழையும் போதே, பிரபுவை கவனித்து, ""ம்... என்ன மாப்ள, கண்ணு சிவந்து, முகம் வீங்கியிருக்கு?'' என்று கேட்டான். பிரபுவுக்கு வெட்கமாக இருந்தது; தலையை குனிந்து கொண்டான்.விஷயத்தை சொன்னாள் பார்வதி.

"என்னக்கா, இந்த மாமா பண்றது சரியில்லையே... ஒரே பையன். சில பேருமாதிரி, கண்ட கண்ட சினிமாவுக்கு போகணும்ன்னா கேட்குறான். கிரிக்கெட் மேட்ச் தானே. அனுப்பினா என்ன? ஆயிரம் ரூபா பெரிய தொகையா? புள்ளையோட சந்தோஷத்துக்கு ஈடு வருமா... இந்த வயசுல ஒவ்வொருத்தன் என்னமா அனுவிக்கிறான். இந்தாளு என்னமோ, வீட்லலேய ஓசியில, "டிவி'ல பாரு, அது, இதுன்னு, "அட்வைஸ்' பண்றாரு.''

முரளியும் புலம்பினான். ஆனாலும், அதை சிவராமனிடம் சொல்ல முடியாது. சிவராமனின் கண்டிப்பு அவனுக்கு தெரியும்.
""டேய் மாப்ள... எழுந்திருடா. எங்கூடவா,'' என்ற முரளி, பிரபுவின் தோள் அணைத்து, வெளியே கூட்டிச் சென்றான். இருவரும், ஒரு கூல்டிரிங்ஸ் கடையில், பாதாம் பால் குடித்தனர்.""டேய்... நீ ஆம்பளடா அழாத. தைரியமா இரு. நான் ஒரு ஐடியா சொல்றேன்... கேக்கறியா?''""என்ன மாமா?''""என்ன மேட்ச் அது. யாருகூட இந்தியா விளையாடுது?''

""பாகிஸ்தான் கூட மாமா. ரொம்ப த்ரில்ரிலிங்கா இருக்கும். வர்ற சனிக்கிழமை, டொன்டி டொன்டி மேட்ச் மாமா,'' கிரிக்கெட் பத்தி பேசும்போதே, குஷியானான் பிரபு.""கவலையை விடு. அன்னிக்கு நீ மேட்ச் பாக்கற. என்ன சந்தோஷமா!'' தடாலடியாக மாமா சொன்னதும், ஆச்சரியமாக கண் விரித்து, ""மாமா...'' என்றான்.""ஆமாண்டா. ஆனா, உங்கப்பாகிட்ட மூச்சு விடாத. இரண்டு நாளைக்கு முன்னாடியே, என் வீட்டுக்கு வந்துரு. நான் பார்த்துக்கிறேன்,'' என, தைரியம் சொன்னான் முரளி.

பிரபுவுக்கு பயம். இதுவரை, அவன், தன் அப்பாவுக்கு தெரியாமல், எதுவும் செய்ததில்லை. ""மாமா, அப்பாகிட்ட சொல்லாம இருக்கிறது, தப்புன்னு தோணுது மாமா. அப்புறம் தெரிஞ்சா கோபப்படுவார்... வேண்டாம் மாமா.''
""அட போடா பயந்தாங்கொள்ளி பயலே. உன் வயசு பசங்க எல்லாம், கில்லாடியா இருக்காங்க. நீ, என்ன வோ....'' என, மாமா வெறியேத்த, பிரபு நினைத்துப் பார்த்தான். ஸ்கிரீன் முழுவதும் பெரிதாக டென், நைன் என்று வினாடிகள் குறைய, கடைசியா ஸ்டேடியமே அதிரும் குரலை, "டிவி'யில் பார்ப்பதே பரவசமாக இருக்கிறது. நேரில் பார்த்தால், எப்படி இருக்கும்... பிரபு, கனவில் மிதக்க ஆரம்பித்தான் . ""சரி மாமா அப்பாகிட்ட சொல்லல. ஒரு வேளை தெரிஞ்சுட்டா?'' என்ற பிரபுவை, தட்டிக் கொடுத்து, ""நான் பாத்துகக்றேன்டா,'' என்றான் முரளி.அன்றிரவு, பிரபு சாதாரணமாக இருந்தது கண்டு, சிவராமன் யோசித்தார்.""என்னடி, பையன் சைலன்ட்டா இருக்கான்?''""ம்... அவன் மாமா வந்து ஏதோ சொன்னான்...'' பார்வதி ஒற்றை வரியில், முடித்துக் கொண்டாள்.

சிவராமன், மெதுவாக பிரபு அருகில் வந்து அமர்ந்து, ""டேய்...பிரபு, நீ எனக்கு உயிர்டா. உனக்கு, எது எது, எந்த எந்த நேரத்துல செய்யனும்ன்னு எனக்கு தெரியும்டா. எல்லாமே, அத அனுபவிக்கிற வரைக்கும்தான்டா பெரிய கிரேஸ் இருக்கும். கிரவுண்ட்ல, ரீப்ளே பார்க்க முடியுமா; பல ஆங்கிள்ல, நல்ல குளோசப்புல, ஹாய்யா படுத்துகிட்டு பார்க்க முடியுமா...என்ன ஒரு கூட்டம்! அந்த லைட் வெளிச்சத்தையும், உற்சாகத்தையும் எவ்வளவு நேரம் நீ அனுபவிப்ப... ம்... அதுக்கு ஆயிரம் ரூபாய்ங்கிறது ரொம்ப அதிகம் கண்ணு. புரிஞ்சுக்க. நமக்கு பணம் என்ன கண்டபடியா வருது? ஏதோ, மிடில் கிளாஸ் வாழ்க்கைய அனுபவிக்கிறோம். நீ, ஒண்ணும் எதுவுமே அனுபவிக்காத பையன் இல்லையே. இதுதான் உச்சம்ன்னு, ரொம்ப ஆசப்படாதடா. லைப்ல எவ்வளவோ இருக்கு,'' என்று அப்பா பேச, பிரபு வெளியில் பொறுமையாகவும், உள்ளே கிண்டலுமாக கேட்டுக் கொண்டிருந்தவன், பின்...
""அப்பா இன்னிக்கு மாமா வந்தாரு. நான் டல்லா இருந்தத பார்த்து, வீட்டுக்கு கூப்பிட்டாரு. போகட்டுமாம்ப்பா?'' அப்பாவியாக கேட்டான்.

சிவராமன் சில நொடிகள் யோசித்து, ""ம்... ரொம்ப நாள் வேண்டாம். ஒரு இரண்டு நாள் போதும். அங்க போய், இங்க கேட்டா மாதிரி, மேட்ச் கீட்ச்ன்னு தொந்தரவு செய்யக் கூடாது. சரியா? "டிவி'யிலேயே பார்த்துக்கணும் என்ன?''
""சரிப்பா... சும்மா ஜாலியா இருந்துட்டு வந்துடுவேன்பா,'' என்றவன், ""வெள்ளிக்கிழமை போயிட்டு, ஞாயிற்றுக் கிழமை வந்துடுறேன்பா. சரியா?''பிரபுவின் தலையை, ஆசையாக தடவினார் சிவராமன்.சனிக்கிழமை...

ஸ்டேடியம், ஒளி வெள்ளத்தில் மிதந்தது. தமிழ் குத்து பாட்டுக்கள் அதிர்ந்தன. ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் வீரர்களைப் பார்த்து, பார்வையாளர்கள் ஒலியெழுப்புவதும், அதில், ஒரு சில வீரர்கள் திரும்ப கையசைப்பதும், பிரபுவுக்கு, ஏதோ சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது. உட்கார சேர் இருந்தாலும், கூட்டத்தில் யாரும் உட்காரவில்லை. மேட்ச் ஆரம்பமானது. இந்தியா பேட் செய்வதாக சொல்ல, விசில் விண்ணை தொட்டது. தொடர்ந்து சிக்சர், போர் என்று இந்தியா விளாச... அரங்கமே ஆர்ப்பரித்தது. பதிலுக்கு, பாகிஸ்தான் ரன்களை குவித்த போது, பிரபுவுடன் சேர்ந்து, அரங்கமும் அமைதி காத்தது. அதே சமயம், பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்க, பூமியே பிளந்தது போல் சத்தம் அதிர்ந்தது. பிரபு இந்த அனுபவத்தால், தன்னை அழைத்து வந்த மாமாவை, பலமுறை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

ஆட்டம், கடைசி பந்து வரை நீடித்தது. ஒரு பந்தில், இரண்டு ரன்கள் எடுத்தால், வெற்றி. ஒரு ரன் எடுத்தால் டை. பேட்ஸ்மேன் அவுட்டானால், இந்தியா வெற்றி என்ற நிலையில், கடைசி பந்து போடப்பட்டது. பாகிஸ்தான் வீரர் தூக்கி அடிக்க, அது, எளிதான கேட்சாக மாற, இந்தியா ஜெயிக்க... பிரபு நான்கடி எம்பி குதித்தான். அந்த வயதில், அந்த உற்சாகம், அவன், அதுவரை அனுபவிக்காத ஒன்றாக இருந்தது.

""பிரபு... மாமா வீட்ல ரெண்டு நாளா என்ன செய்த?'' என்று கேட்டார் சிவராமன்.
""ம்... கேரம்போர்டு விளையாடினேன்பா; அப்புறம் பீச் போனோம்; சினிமாவுக்கு கூப்பிட்டாரு போகல.''
""ஏன் "டிவி'யில மேட்ச் பார்க்கலயா?''
"" ம்...'' பிரபு நெளிந்தான். ஒருவேளை அப்பா தெரிந்து கொண்டு கேட்கிறாரோ... நாம், அம்மாவுக்கு கூட சொல்லவில்லையே!
""இல்லப்பா, உங்களுக்கு பிடிக்கலை. அது தான் மேட்ச் பார்கிறதையே விட்டுட்டேன்,'' பிரபு சொல்ல, ""ம்...என்னமோ அதிசயமா இருக்கு,'' என, அப்பா சொல்லி விட்டு, வேறு வேலையை பார்க்க போனார்.

அடுத்த நாள் காலை, பிரபுவை அவசரமாக எழுப்பினார் அப்பா.""பிரபு... பிரபு''""என்னப்பா?'' எழுந்தான். ""போய், பல் தேச்சு, முகம் கழுவிட்டு வா?'' விரட்டினார்.""எதுக்குப்பா,லீவு நாள் தானே?''""அட போடா, ஒரு முக்கியமான விஷயம்! ம்... போ,'' அப்பா மேலும் விரட்டினார். பிரபு பத்து நிமிடத்தில், துண்டால் முகம் துடைத்து, அப்பா எதிரில் வந்து அமர்ந்தான்.அன்றைய செய்தித்தாளை காண்பித்து, "" இங்க பாருடா, கிரிக்கெட் சூதாட்டம்... வாசிம் ஜமால் கைது!'' படித்ததும் திடுக்கிட்டான் பிரபு. இவன்... அன்று மேட்சில், கடைசி பந்தில், அவுட் ஆன பாகிஸ்தான் பிளேயராச்சே!

சுவாரஸ்யமாக, பேப்பரை வாங்கி படித்துப் பார்த்தான். அவன் படிக்கும் வரை, அப்பா பொறுமையாக இருந்தார். படித்து முடித்து, வியப்பு அகலாமல், அதிர்ச்சியில் இருந்தான் பிரபு. அந்த வெற்றி ரன்னை எடுத்தால், ஜமாலின் தனிப்பட்ட ஸ்கோர், ஐம்பது ஆகும் என்பதால், அது கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே அவுட்டாகி விட்டான். எல்லாம் ஆதாரத்துடன் வெளியாகியிருந்தது.
""பாத்தியா பிரபு... உன்மாதிரி ரசிகருங்க, "மேட்ச் மேட்ச்'ன்னு துடிக்கறீங்க... அவன் என்னாடான்னா, காச வாங்கிக்கிட்டு, செட்டப் பண்ணி விளையாடி, மேட்ச் பாக்கற எல்லாரையும் ஏமாத்தி, முட்டாளாக்குறான். அந்த கிரவுண்டுல அந்த ஜமால், "அவுட்' ஆனதும் குதிச்சிருப்பாங்க. ஆனா, அவன் மட்டும் சிரிச்சிருப்பான். ரசிகருங்க காட்டுற சந்தோஷம் பொய்யா போச்சு பாத்தியா?

""எத்தனை பேர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்துல, டிக்கெட் வாங்கி, நாட்டுப்பற்றோட வெறியா ஆட்டத்த பாக்குறாங்க. எது உண்மை, எது பொய்ன்னு புரியாம ரசிக்கிறாங்களே அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! சினிமா கூட பொய் தான். ஆனா, தெரிஞ்சு பாக்குறோம். இந்த கிரிக்கெட்... யாரோ பெட்டிங்ல சம்பாதிக்க, விளையாட்டு வீரர்களை, தங்கள் இஷ்டப்படி ஆட வைக்குறாங்க. இன்னிக்கு, அந்த ஜமால் கைது ஆயிருக்கான், நாளைக்கே ஜாம் ஜாமுன்னு வெளியில வந்துருவான். இதெல்லாம் மறந்திடும். உங்களை மாதிரி ஆட்கள் தொடர்ந்து ஏமாறுவீங்க!

""ஆனாலும், நீ, என் பேச்சை மதிச்சு, மேட்சுக்கு போகாம இருந்த. இல்லன்னா, நீயும் முட்டாளா ஆயிருப்ப. இதுலேந்து புரிஞ்சுக்க. அப்பா பேச்சை கேட்டா, எல்லாம் நல்லா விதமாகத்தான் முடியும்,'' என்று சொல்லி, பிரபுவை ஆழமாக பார்த்தார் சிவராமன். பிரபுவிற்கு, உள்ளுக்குள், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி, ஏமாற்றத்தை விட, அப்பா, தன் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கை, அவனை நிலைகுலைய செய்தது.மேலும், அப்பாவை ஏமாற்றி, ஒரு பித்தலாட்ட ஆட்டத்தை, ரசிக்க வைத்து, தன்னை ஏமாற்றிய, அந்த கிரிக்கெட்டை நினைத்துப் பார்த்தான்.

விளையாட்டு என்பது வாழ்க்கை அல்ல. ஆனால், அந்த விளையாட்டில் கூட, சூது விளையாடுகிறது. "தன் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பாவின் பேச்சை கேட்காமல், பொய் சொல்லி, ஒரு, "செட்டப்' ஆட்டத்தை கண்டு களித்தோமே, சே...' என்று, தன்னை தானே நொந்து கொண்டான் பிரபு.உடனே, அப்பாவிடம் உண்மையை கூறி, மன்னிப்பு கேட்க விரும்பினான். ஆனால் பொய் சொல்லியதை, அப்பாவால் ஜீரணிக்க முடியாது என்பது புரிந்தது. "அப்பாவை, இனிமேல், சிறிதும் வருத்தப்பட வைக்க கூடாது...' என்று நினைத்தான்.""ஏன்டா ஒரு மாதிரியா பாக்குற?'' சிவராமன் கேட்டார்.

"சாரிப்பா...'' என, பிரபு சொன்னான்.""எதுக்குடா... நீ என்ன தப்பு பண்ண?''""உங்ககிட்ட பிடிவாதமாக பேசினதுக்குப்பா. இனிமே உங்க மனசுப்படி நடந்துக்குறேன்பா.''சிவராமன் சிரித்தபடி, எழுந்து போனார்.அந்த செய்தித்தாளை சுட்டெரிப்பது போல் பார்த்தான் பிரபு. பின், எழுந்து, தன் அலமாரி நோக்கிச் சென்றவன், நண்பர்களிடம் காட்டி, பெருமைப்பட வைத்திருந்த, டிக்கெட்டை எடுத்து, சுக்குநூறாக கிழித்து எறிந்தான்.
#58
இரண்டு துறவிகள் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் துறவியாக இருந்தாலும் அவசரத் தேவைகளுக்கு கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். மற்றொருவரோ " முற்றும் துறந்தவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. அவர்கள் தேவை அறிந்து இறைவன் உதவுவார். " என்ற எண்ணம் கொண்டவர். வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதைக் கடந்தால்தான் அவர்கள் மேலும் பயணம் செய்ய முடியும். ஆற்றங்கரையில் படகோட்டி படகுடன் நின்றிருந்தான்.

பணமில்லாத துறவி " படகுக் காரனுக்குத் தர நம்மிடம் பணம் இல்லை. இரவை இங்கேயே கழிப்போம். பொழுது விடிந்ததும் யாராவது இங்கு வந்தால் நமக்கு உதவி கிடைக்கும் நாம் அக்கரை போவோம்" என்றார்.



அதற்கு மற்றொருவர் " இங்கு இரவில் தங்குவது ஆபத்து. என்னிடம் பணம் உள்ளது. வாருங்கள் போவோம்" எனக் கூட்டிச் சென்றார். மறுகரையை அடைந்ததும் பணம் வைத்திருந்த துறவி " துறவியாக இருந்தாலும் நாம் சிறிதளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்னிடம் பணம் இருந்ததால் தானே இங்கு வர முடிந்தது. உங்களைப் போன்று நானும் இருந்திருந்தால் நம் நிலைமை என்ன? சிந்தித்துப் பாருங்கள் என் வழி தான் சிறந்த வழி" என்றார்.



அதற்கு பணம் இல்லாதவர் " நீங்கள் சொன்னது உண்மைதான், என் நிலைமையை நினைத்துப் பாருங்கள் பணம் இல்லாமலேயே நான் இங்கு வந்து விட்டேன் இறைவன் உங்கள் வழியாக எனக்கு உதவி செய்துள்ளார். என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை" என உறுதியுடன் சொன்னார்.


Two monks were traveling together. One of them is a monk but has a policy of keeping some money for emergencies.Another said, "Those who are totally renunciates need nothing. God will know their need and help them. "He who has the thought. A river crossed the road. Only by crossing it can they travel further. He was standing with a rowing boat on the river bank.The monk with no money "We have no money to pay the boatman. We will spend the night here. He said, "If someone comes here after dawn, we will get help and we will go to Akkarai.Another said, "It is dangerous to stay here at night. I have money. Let's go" he added. On reaching the other side, the monk who had money said, "Even as a monk, we should have some money, I had money so I could come here by myself. If I were like you, what would be our situation? Think about it, my way is the best way.The one who has no money for it "What you said is true, think about my situation, I have come here without money, God has helped me through you. "There is no need to change my mind," he said firmly."

#59
Special Occasion and Celebration / Re: Happy Labour Day
Last post by Administrator - May 01, 2024, 03:01 PM
  Happy Labour Day!
#60
Special Occasion and Celebration / Happy Labour Day
Last post by NKP250522 - May 01, 2024, 02:44 PM
Today is the day to honour those souls who are striving hard in life to make it worthwhile.

Happy Labour Day to everyone!



Every year on May 1, Labour Day is celebrated worldwide to recognise and appreciate the contributions of labourers and to advocate for workers' rights.

This significant day also commemorates the Labour Class Movement of the 19th century, during which workers tirelessly advocated for improved working conditions, including an eight-hour workday and fair wages.

It is crucial to uphold the spirit of Labour Day by spreading awareness and honouring the hard work and dedication of workers everywhere.

           Happy Labour Day!

"There is no substitute for hard work."- Thomas Edison