எது சிறந்த ஞானம் - கழுதையிடம் கற்றுகொள்! - சிறுகதை

Started by Administrator, May 01, 2024, 03:56 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Administrator


ஒரு ஞானி இருந்தார். அவரிடம் குடும்பஸ்தர் ஒருவர் வந்தார்.
தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார்

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை." அதே போல் மாலையில் "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த ஞானம்.

இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.